ADDED : பிப் 28, 2025 05:14 AM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் இந்தி திணிப்பை எதிர்த்து தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் முருகன், மாவட்டஊராட்சி துணைச் சேர்மன் தங்கம், நகரஅவைத் தலைவர் குணா, நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், தலைமைசெயற்குழு உறுப்பினர்செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வடக்கு வீதி, பஸ் நிலையம், ஆஸ்பிட்டல் ரோடு உள்ளிட்ட இடங்களில் கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
