sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போதையில் தகராறு; டிரைவர் கொலை

/

போதையில் தகராறு; டிரைவர் கொலை

போதையில் தகராறு; டிரைவர் கொலை

போதையில் தகராறு; டிரைவர் கொலை


ADDED : பிப் 25, 2025 06:56 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே போதையில் டிரைவரை கொலை செய்த, சக டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சீர்காழி அடுத்து திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் மாயவன், 47; மயிலாடுதுறை அடுத்த கெடாராம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்,45; டிரைவர்களான இருவரும், கடந்த 18ம் தேதி, சென்னையில் இருந்து அரியலுார் சிமெண்ட் கம்பெனிக்கு, லாரியில் சாம்பல் லோடு ஏற்றிக் கொண்டு, ஒரே லாரியை மாறி மாறி ஓட்டி சென்றனர்.

அன்றைய தினம் இரவு, உளுந்துார்பேட்டை பரிக்கல் அருகே கனரக வானங்கள் நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தனர். அப்போது, கெடிலம் டாஸ்மாக்கில் மது வாங்கி இருவரும் குடித்துள்ளனர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த மாயவன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேரக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் கொலை வழக்கு பதிந்து நாகராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us