/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 07, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி அறிவுறுத்தலின்படி, கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கல்வராயன்மலையில் உள்ள அருவங்காடு, ஈச்சங்காடு, கீழாத்துக்குழி, மணியார்பாளையம் கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர்.
அதில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்னைகள் குறித்து விளக்கி, விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு வழங்கும் சலுகைகள், நிதியுதவி குறித்தும், சிறு, குறு தொழில தொடங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.