/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
/
முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
ADDED : ஆக 20, 2024 05:37 AM
தியாகதுருகம்: பிரிதிவிமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா சக்தி அழைத்தல்,காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஆரியமாலா-காத்தவராயன் திருக்கல்யாணம், மாலையில் காத்தவராயன்-சின்னான் வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கழுமரம் ஏறுதல், 10:30 மணிக்கு அக்னி மிதித்தல், மதியம் 12:00 மணிக்கு காளி கோட்டை இடித்தல், தொடர்ந்து மாலை 3:00 மணியளவில், மாரியம்மன் தேர்த்திருவிழா நடந்தது.
அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில்,மாரியம்மனை வைத்து, தேரின் வடம் பிடித்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். இன்று இரவு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

