ADDED : பிப் 26, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் செந்தில் , ராஜாமணி, வீரசாமி, மகாலிங்கம், வட்ட நிர்வாகிகள் சம்பத்ராஜா, சலீம், கோட்ட நிர்வாகிகள் ஏழுமலை, ராஜேந்திரகுமார், சந்திரராயர், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். வட்ட செயலாளர் சீனிவாசன் நிறைவுரையாற்றினார்.
இதில், மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்த கூடாது; ஊதிய உயர்வு மற்றும் வேலைபளு தொடர்பாக பேச்சுவார்த்தை துவக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மின்வாரிய ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். வட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

