நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் 2,100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.
கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தெக்கம்பட்டு மலைப்பகுதியில், பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, பேரல்களில் இருந்த 2,100 லிட்டர் ஊறலை போலீசார் கொட்டி அழித்து, அங்கிருந்த 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தெக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் தீர்த்தான் என்பவர் மீது கரியலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.