ADDED : மே 27, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வடக்கனந்தலில் வேளாண் துறை சார்பில் பண்ணை மேம்பாட்டு குழு கூட்டம் நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.
வேளாண் துணை இயக்குனர் முருகன், வேளாண் உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ், உதவி பொறியாளர் கண்ணன், விதை சான்று அலுவலர் நித்யா, வேளாண் அலுவலர்கள் முத்துராஜ், ராஜா பங்கேற்றனர்.
கூட்டத்தில் தரமான ஆதார நிலை விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும். மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்திடும் தொழில்நுட்ப விளக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

