sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயியிடம் பணம் மோசடி அரசு அதிகாரி மீது வழக்கு

/

விவசாயியிடம் பணம் மோசடி அரசு அதிகாரி மீது வழக்கு

விவசாயியிடம் பணம் மோசடி அரசு அதிகாரி மீது வழக்கு

விவசாயியிடம் பணம் மோசடி அரசு அதிகாரி மீது வழக்கு


ADDED : ஆக 21, 2024 06:28 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : விவசாயியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய அரசு அலுவலர் மற்றும் அவரது மனைவி மீது கோர்ட் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரைச் சேர்ந்தவர் செல்வம், 59; விவசாயி. இவரிடம் கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரைச் சேர்ந்த தசரதராஜன், 50; மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக எழுத்தராக பணிபுரியும் இவர், வீடு கட்ட கடந்தாண்டு ஏப்ரல் 2ம் தேதி ரூ.3.50 லட்சம் கடன் வாங்கினார்.

கடனை திருப்பிதராத தால் செல்வம் கடந்த நவம்பர் 19ம் தேதி தசரதராஜன் வீட்டிற்குச் சென்று கேட்டபோது, மனைவி வளர்மதி பெயரில் வங்கி காசோலை கொடுத்துள்ளார். அதனை வங்கியில் செலுத்தியபோது, கையெழுத்து வேறுபாடு காரணமாக 'ரிட்டன்' ஆனது.

அதனால், தசரதராஜனிடம் மீண்டும் கடன் பணத்தை கேட்டபோது தர முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செல்வம், தன்னை ஏமாற்றிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார்.

மனுவை ஏற்ற நீதிபதி, செல்வம் புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் தசரதராஜன், அவரது மனைவி வளர்மதி ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us