/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டில் புகுந்த பாம்பை மீட்ட தீயணைப்பு துறை
/
வீட்டில் புகுந்த பாம்பை மீட்ட தீயணைப்பு துறை
ADDED : மார் 14, 2025 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு மீட்பு குழுவினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
அரகண்டநல்லூர், காமராஜர் வீதியில் வசிப்பவர் ரவி மனைவி மல்லிகா, 45; நேற்று பகல் 2:00 மணி அளவில் வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை கண்டு அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தார். இது குறித்து திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் நாகேஸ்வர்ராவ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று, வீட்டுக்குள் பதுங்கிய நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அத்திப்பாக்கம் காப்பு காட்டில் விட்டனர்.