/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
/
கள்ளக்குறிச்சியில் 28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் 28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் 28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூன் 25, 2024 06:15 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2024 ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.