/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் குளித்தவர் மூழ்கி பலி; பிறந்த நாளில் சோகம்
/
ஆற்றில் குளித்தவர் மூழ்கி பலி; பிறந்த நாளில் சோகம்
ஆற்றில் குளித்தவர் மூழ்கி பலி; பிறந்த நாளில் சோகம்
ஆற்றில் குளித்தவர் மூழ்கி பலி; பிறந்த நாளில் சோகம்
ADDED : மார் 30, 2024 06:19 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரைச் சேர்ந்தவர் குரு மகன் குபேந்திரன், 21; இவருக்கு நேற்று பிறந்தநாள். தனது நண்பர்களுடன் திருவண்ணாமலை செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றின், தரைப்பாலம் அருகே மதியம் 2::50 மணியளவில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது குபேந்திரன் நீரில் மூழ்கினார். உடன் குளித்தவர்கள் கூச்சல் இட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று குபேந்திரனை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குபேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அரகண்டநல்லார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

