sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வெயில் எதிரொலி: பசுமைப்பந்தல் அமைக்க கோரிக்கை

/

வெயில் எதிரொலி: பசுமைப்பந்தல் அமைக்க கோரிக்கை

வெயில் எதிரொலி: பசுமைப்பந்தல் அமைக்க கோரிக்கை

வெயில் எதிரொலி: பசுமைப்பந்தல் அமைக்க கோரிக்கை


ADDED : மார் 10, 2025 12:08 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்க, பசுமைப்பந்தல் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகர சாலையில், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி பேருந்துகள் நகர்ப்புறம் வழியாக செல்லும் போது, நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கும்.

தற்போது வெயிலின் தாக்கத்தால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பைக்கில் செல்பவர்கள், பாதசாரிகள் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் சிரமமடைகின்றனர். அதேபோல அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதி, அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் நிழல் தரும் வகையில் பசுமைப்பந்தல் அமைக்க, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us