ADDED : பிப் 28, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்,; தியாகதுருகம் அருகே, 2 சவரன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி புது காலனியை சேர்ந்த மாயவன் மனைவி சந்திரா; 50. இவர் சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் வேலை செய்யும் தனது மகனை பார்க்க சென்றார்.
இந்நிலையில், கடந்த பிப்.27 ம் தேதி இரவு 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்த போது, முன் பக்க கதவின்
பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது,
பீரோவில் இருந்த 2 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.