/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
/
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
ADDED : மே 10, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
உளுந்துார்பேட்டை டோல்கேட் மற்றும் பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஓட்டல் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சி தலைமையிலான அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். பேக்கரி கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. அதன்பேரில் இரு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.