/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஆக 02, 2024 02:28 AM

வானுார்: வானுார் ஊராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் சண்முகம் அறிவுறுத்தலின் பேரில், நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பத்திர எழுத்தர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், பொறுப்பாளர் முருகன் தலைமை தாங்கி, அடையாள அட்டைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், அணி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், அய்யனார், மேலவை பிரதிநிதிகள் அய்யப்பன், ஜெயகோபால், சேகர், மாவட்ட பிரதிநிதி மூர்த்தி, இளைஞரணி துணைத் தலைவர் சங்கர், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் ஜெய்பீம், ஒன்றிய மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி, ஜெ., பேரவை துணைச் செயலாளர் மணிமாறன், அ.தி.மு.க., நிர்வாகிகள் மாதவன், ராஜாஜி, வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.