sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண் ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவர் கைது

/

பெண் ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவர் கைது

பெண் ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவர் கைது

பெண் ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவர் கைது


ADDED : மார் 12, 2025 06:58 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகராறில் ஈடுபட்ட, வார்டு உறுப்பினரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

உளுந்துார்பேட்டை தாலுகா பு.கொணலவாடியை சேர்ந்தவர் தங்கதுரை மனைவி ஜெயக்கொடி,50; ஊராட்சி மன்ற தலைவர். இவர் குடிநீருக்காக 'போர்வெல்' அமைக்கும் பணியை மேற்கொண்டார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கொளஞ்சியின் கணவர் சக்திவேல், 47; அங்கு வந்தார்.

அவருடன் சகோதரர் குமார் மற்றும் ஆறுமுகம் மகன் கார்த்திக் ஆகியோர் 'போர்வெல்' பணி தொடர்பாக, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி மற்றும் அவரது மகன் ஜெயக்குமாரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் இருதரப்பினருக் கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து ஜெயக்கொடி, புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் சக்திவேல் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் குமார், கார்த்திக் ஆகியோரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us