/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : ஆக 15, 2024 04:44 AM
கள்ளக்குறிச்சி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6.50 லட்சம் வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் கோபால் மகன் சபாநாயகம்,50; விவசாயி. இவர் தனது மகன் பிளஸ் 2 முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பதாக எடையூரை சேர்ந்த பாண்டியனிடம் கூறினார். அதற்கு அவர், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த காந்தி,60; என்பவர் பலருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.
அதனையொட்டி சபாநாயகம், கடந்த 2022ம் ஆண்டு, கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் காந்தியை சந்தித்து, தனது மகனுக்கு வேலைவாங்கி தருமாறு கேட்டார். அதற்கு அவர் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.8 லட்சம் செலவாகும் எனவும் கூறினார்.
அதனை நம்பிய சபாநாயகம், பல்வேறு தவணைகளாக ரூ.6.50 லட்சத்தை, காந்தியிடம் கொடுத்தார். ஆனால், நீண்ட நாட்களாகியும் காந்தி வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து சபாநாயகம் அளித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து காந்தியை நேற்று கைது செய்தனர்.