நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலத்தில் வரலட்சுமி பண்டிகை முன்னிட்டு விஜயபுரம் செல்வ முருகன் கோவிலில் அக்னி சட்டி மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு திரளான பெண்கள் அக்னி சட்டியும், பால்குடமும் ஏந்தி முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
அங்கு, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

