/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
27ம் தேதி 4 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்
/
27ம் தேதி 4 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்
27ம் தேதி 4 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்
27ம் தேதி 4 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஆக 25, 2024 06:28 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 27ம் தேதி 4 கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 15 துறைகளைச் சேர்ந்த மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 27ம் தேதி திருநாவலுார் ஊராட்சி களமருதுார், உளுந்துார்பேட்டை ஊராட்சி பல்லவாடி, திருக்கோவிலுார் ஊராட்சி வேங்கூர், ரிஷிவந்தியம் ஊராட்சி ரிஷிவந்தியத்திலும் முகாம் நடக்கிறது.
முகாமில் சம்மந்தப்பட்ட கிராமப் பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இத்தகவலை கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.