/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்
/
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்
ADDED : ஏப் 22, 2024 06:26 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கூ.கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பிரச்னை தொடர்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் போக்கை கண்டித்து நேற்று காலை 8:15 மணியளவில் உளுந்துார்பேட்டை - சேர்ந்தநாடு சாலையில் காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து 8:40 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

