/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூலி பணம் கொடுப்பதில் தகராறு மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
/
கூலி பணம் கொடுப்பதில் தகராறு மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
கூலி பணம் கொடுப்பதில் தகராறு மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
கூலி பணம் கொடுப்பதில் தகராறு மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : மே 19, 2024 05:29 AM
தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே சம்பள பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்களத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் மணி,41; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் அஜித்,24; என்பவருக்கு சம்பள பணம் ரூ.700 கொடுத்துள்ளார். ஆனால், சம்பளம் தரவில்லை என அஜித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி அஜித் உள்ளிட்ட அவரது தரப்பை சேர்ந்த 3 பேர் மணியின் வீட்டிற்கு சென்று சம்பள பணத்தை கேட்டு, அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மணி அளித்த புகாரின் பேரில் சுப்ரமணி மகன் அஜித்,24; கோவிந்தன் மகன் ராஜா, கதிர்வேல் மகன் முருகன் ஆகிய 3 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து, அதில் அஜித்தை கைது செய்தனர்.

