sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்

/

திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்

திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்

திருடி வரப்பட்ட மினி டெம்போ விரட்டி பிடித்த போலீசார்


ADDED : மார் 13, 2025 03:12 AM

Google News

ADDED : மார் 13, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை:திருடி வரப்பட்ட மினி டெம்போவை, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த மருதுாரை சேர்ந்தவர் ராஜீவ். இவர், நேற்று முன்தினம் வீட்டு அருகே நிறுத்தி வைத்திருந்த தன் மினி டெம்போ காணவில்லை என மேலுார் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து திருச்சி, கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில், திருச்சி சாலையில் ரவுண்டானா அருகே வந்த மினி டெம்போவை நிறுத்தினர்.

ஆனால், டெம்போவை நிறுத்தாமல் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். போலீசாரும் விடாமல் டெம்போவை விரட்டி சென்று பிடித்தனர்.

அப்போது, டெம்போவில் இருந்த ஒருவர் தப்பிய நிலையில், ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில், பெரம்பலுார் அடுத்த பில்லாங்குளம் பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் வெங்கடேசன், 27, என்பதும், தப்பியோடிய நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாராம், 32, என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, வெங்கடேசனை மதுரை போலீசாரிடம், உளுந்துார்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us