sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மழைமானி இயந்திரம் பழுது; சீர் செய்ய நடவடிக்கை தேவை

/

மழைமானி இயந்திரம் பழுது; சீர் செய்ய நடவடிக்கை தேவை

மழைமானி இயந்திரம் பழுது; சீர் செய்ய நடவடிக்கை தேவை

மழைமானி இயந்திரம் பழுது; சீர் செய்ய நடவடிக்கை தேவை


ADDED : செப் 05, 2024 06:50 AM

Google News

ADDED : செப் 05, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேதமடைந்த, பணிபுரியாத நிலையில் உள்ள மழைமானிகளை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக கணிக்கிட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மழைமானிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கள்ளக்குறிச்சி தாலுகாவில் -3, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் தாலுகா பகுதிகளில் தலா 2, வாணாபுரம் -10, திருக்கோவிலுார் -4, உளுந்துார்பேட்டை -3 என மொத்தமாக 24 இடங்களில் மழை மானி கருவி பொருத்தப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் உள்ள மழைமானியில் சேகரமாகும் தண்ணீரை பொருத்து, மி.மீ., அளவில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கெடுக்கப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதில், சூளாங்குறிச்சி மற்றும் மாடாம்பூண்டியில் உள்ள மழைமானி பழுதாகி உள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை முறையாக கணக்கீடு செய்ய முடியவில்லை. எனவே, வடகிழக்கு பருவமழை பெய்யும் முன் பழுதாகி உள்ள மழைமானி கருவிகளை சரிசெய்வதுடன், முறையாக பராமரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us