ADDED : மே 10, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.
கடந்த 4ம் தேதி துவங்கிய விழாவின் 6ம் நாளான நேற்று காலை 6:30 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்திய பூஜைகள், 8:15 மணிக்கு ராமானுஜர் புறப்பாடாகி அனைத்து சன்னதிகளிலும் மங்களாசாசனம் நடந்தது. 10:30 மணிக்கு ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர், ராமானுஜருக்கு கண்ணாடி அறை மண்டபத்தில் விசேஷ அலங்கார திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ம் தேதி ராமானுஜர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.