ADDED : பிப் 27, 2025 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, ; தமிழக அரசை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் அகத்தியன், கோவிந்தன், பாபு, ஏழுமலை தலைமை தாங்கினர்.
நிர்வாகிகள் சிலம்பரசன், குமார், மணிகண்டன், ராஜா முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் ரகுநாத், தொழிற்சங்க செயலாளர் மதிவாசன், துணை செயலாளர் முத்துராமன் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும், பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டது.