ADDED : மே 03, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரத்தில் காணா மல் போன மகனை கண்டுபிடித்து தரும்படி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் வீரமணி, 28; வேலைக்கு சென்று கொண்டிருந்த இவர், கடந்த ஏப்.28-ம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
எனவே காணாமல் போன தனது மகனை கண்டு பிடித்து தரும்படி இவரது தாய் விஜயா போலீசில் புகார் அளித்தார்.
வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.