sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி திருக்கோவிலுார் அருகே கிராமமே சோகம்

/

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி திருக்கோவிலுார் அருகே கிராமமே சோகம்

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி திருக்கோவிலுார் அருகே கிராமமே சோகம்

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி திருக்கோவிலுார் அருகே கிராமமே சோகம்


ADDED : மே 14, 2024 04:56 AM

Google News

ADDED : மே 14, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன்,75; விவசாயி. இவரது மனைவி லட்சுமி,65; இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை லட்சுமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன், திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அன்று மாலை 6:00 மணிக்கு இறந்தார்.

அதனையொட்டி அவரது உடல் இரவு 8:00 மணிக்க வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடல் நேற்று அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மனைவி இறந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த சுப்புராமன் காலை 8:00 மணியளவில், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து இறந்தார்.

அதனையொட்டி இருவரின் உடலும் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us