ADDED : மே 30, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி காலபைரவருக்கு 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.