/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மார் 27, 2024 07:37 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், காலசந்தி பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து தாயார் மண்டபத்தில் உபயநாச்சியார் சகிதம் பெருமாள், உற்சவர் சுவாமிகளை எழுந்தருள செய்தனர். சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரங்களுக்குப் பின் திருக்கல்யாணம் துவங்கியது.
விஸ்வக்சேனர் வழிபாடு, அங்குரார்ப்பணம், பகவத் சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. யாகம் பூர்த்தி செய்தபின் மேள வாத்தியங்கள் முழங்க பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.
மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

