/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய இருவர் கைது
/
ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய இருவர் கைது
ADDED : செப் 11, 2024 01:48 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே ரேஷன் அரிசிகள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஏட்டு ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12:30 மணியளவில் விருகாவூர்- அசகளத்துார் செல்லும் சாலையில் பொரசக்குறிச்சி பஸ் ஸ்டாப் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகபடும்படியாக வந்த அசோக் லைலண்ட் தோஸ்த் டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ கொள்ளவு கொண்ட 30 மூட்டைகளில் மொத்தம் 1,500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வாகன ஓட்டுநர் கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் கிராமத்தை சேர்ந்த முருகேஷ்,52; மற்றும் வாகனத்தில் இருந்த சின்னசேலம் அடுத்த உலகியநல்லுார் ரவி,30; ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.