ADDED : ஜூன் 25, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை, : திருநெல்வேலி, கீழ்கடையம் அடுத்த அருணாசலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணவர்தன், 58; டைலர். இவர், தனியார் ஆம்னி பஸ்சில் நேற்று முன்தினம் இரவு, சென்னைக்குச் சென்றார்.
உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் காந்தி நகர் அருகே டீ கடையில் பஸ் நின்றது. அப்போது குணவர்தன் சாலையை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த குணவர்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.