ADDED : ஜூலை 26, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மேல்அக்ரஹார தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமணன் மகன் பாபு,56; கடந்த 24ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக பாபுவுக்கும் அவரது மனைவி ரேணுகாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் கோபமடைந்து வீட்டிலிருந்து வெளியே சென்ற பாபு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் பாபுவை தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
பாபுவின் மனைவி ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

