sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆட்டோ டிரைவர் மர்ம சாவு சந்தேகம் உள்ளதாக மனைவி புகார்

/

ஆட்டோ டிரைவர் மர்ம சாவு சந்தேகம் உள்ளதாக மனைவி புகார்

ஆட்டோ டிரைவர் மர்ம சாவு சந்தேகம் உள்ளதாக மனைவி புகார்

ஆட்டோ டிரைவர் மர்ம சாவு சந்தேகம் உள்ளதாக மனைவி புகார்


ADDED : ஜூன் 05, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம், காட்டுகொட்டாயை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சுரேஷ், 33; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வேதேஸ்வரி, 30. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுரேஷ் சங்கராபுரத்தில் தான் குடியிருந்த வீட்டை விற்று விட்டதால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வேதேஸ்வரி கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் அவரது தாய் வீடான கடுவனுாருக்கு சென்று கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

சுரேஷ் கடந்த இரண்டு ஆண்டாக எஸ்.வி.பாளையத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் சுரேஷ் அவரது வீட்டில் தலையில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் சுரேஷ் உடலை கைபற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக சங்கராபுரம் போலீசில், வேதேஸ்வரி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் சாவுக்கு வேறு ஏதாவது காரணமா என, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us