/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
/
பைக்கில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
ADDED : மார் 11, 2025 05:01 AM
சின்னசேலம் : நாய் குறுக்கிட்டதால் பைக்கில் இருந்த தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் கணபதி, 54; இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் அன்பரசு, 24; என்பவருடன், பைக்கில் தொட்டியம் கிராமத்தில் நடந்த வார சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.
தொட்டியம் பழைய பஸ் நிலையம் அருகே சென்றபோது நாய் குறுக்கிட்டதால் நிலைத் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயமடைந்த கணபதியை, அருகிலிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.