sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் 12 வீடுகள் சேதம் : 4 கால்நடைகள் உயிரிழப்பு

/

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் 12 வீடுகள் சேதம் : 4 கால்நடைகள் உயிரிழப்பு

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் 12 வீடுகள் சேதம் : 4 கால்நடைகள் உயிரிழப்பு

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் 12 வீடுகள் சேதம் : 4 கால்நடைகள் உயிரிழப்பு


ADDED : டிச 06, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையில் 12 வீடுகள் சேதமடைந்தன. 3 கன்றுகுட்டிகள், ஒரு ஆடு என 4 கால்நடைகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில், மி.மீ., அளவில் கள்ளக்குறிச்சி 12, தியாகதுருகம் 28, விருகாவூர் 20, கச்சிராயபாளையம் 3.50, மூரார்பாளையம் 20, வடசிறுவள்ளூர் 21, கடுவனுார் 9, மூங்கில்துறைப்பட்டு 4, அரியலுார் 27, சூளாங்குறிச்சி 10, ரிஷிவந்தியம் 17, கீழ்பாடி 16, கலையநல்லுார் 13, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 8, வாணாபுரம் 29, மாடாம்பூண்டி 27, திருக்கோவிலுார் வடக்கு 5, திருப்பாலப்பந்தல் 38, வேங்கூர் 22.40, பிள்ளையார்குப்பம் 18, எறையூர் 20, உ.கீரனுார் 26 என மாவட்டம் முழுவதும் 393.90 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 16.41 மி.மீ., மழை பதிவானது.

12 வீடுகள் சேதம் நேற்று முன்தினம் பெய்த மழையால் உளுந்துார்பேட்டை தாலுகாவில் 8 கூரை வீடுகளின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது.

அதேபோல், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் தாலுகாவில் தலா ஒரு வீடு, வாணாபுரம் தாலுகாவில் இரண்டு வீடுகள் என மொத்தமாக 12 வீடுகளின் ஒரு பகுதி விழுந்து சேதமடைந்தது. மழையால் திருக்கோவிலுார் தாலுகா, மொகலார் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன், உளுந்துார்பேட்டை தாலுகா, எறையூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் அண்ணாமலை, வாணாபுரம் தாலுகா, ஜம்பை கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் கணேசன் ஆகியோரது கன்றுகுட்டிகளும், உளுந்துார்பேட்டை தாலுகா, எல்லை கிராமத்தை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் பழனிவேல் என்பவரது வெள்ளாடும் உயிரிழந்தன.






      Dinamalar
      Follow us