sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ்களில் திருடிய 2 பேர் கைது

/

பஸ்களில் திருடிய 2 பேர் கைது

பஸ்களில் திருடிய 2 பேர் கைது

பஸ்களில் திருடிய 2 பேர் கைது


ADDED : செப் 23, 2024 06:20 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை, : கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மோட்டல்களில் பயணிகள் உணவு சாப்பிட பஸ்கள் நின்று செல்வது வழக்கம்.

பஸ்களில் இருந்து பயணிகள் சாப்பிட செல்லும் சமயத்தில், பஸ்சில் அவர்கள் பைகளில் உள்ள நகை, லேப்டாப் மொபைல் போன் உள்ளிட்டவை திருடு போவது வழக்கமாக இருந்தது. இதுகுறித்து திருநாவலுார் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கெடிலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே மாருதி ஆல்டோ காரில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள், திருச்சி அடுத்த கல்லுக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் சிவா (எ)சிவகிஷன்,21; முகேஷ் மகன் சுதர்சன்,20; எனவும்; இருவரும் திருச்சி டோல்கேட் பகுதியை சேர்ந்த இருவருடன் சேர்ந்து நெடுஞ்சாலை மோட்டல்களில் நிற்கும் பஸ்களில் ஏறி, பயணிகளின் உடமைகளை திருடியது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து 80 கிராம் நகைகள், 2 லேப்டாப், திருடுவதற்கு பயன்படுத்தி வந்த காரை பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us