ADDED : மே 08, 2025 01:52 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான, 2 இளம் பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் சேகர் மகள் சுவாதி,23; பி.எஸ்.சி., பட்டதாரி. கடந்த 5ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்தவர் திடீரென மாயமானார். இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் அபிராமி புகார் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தலை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் திவ்யா,18; தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார்.
இவர், கடந்த 5ம் தேதி காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் சாந்தி புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.