sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது

/

 பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது

 பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது

 பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது


ADDED : நவ 27, 2025 05:07 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துாரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தனலட்சுமி, 50; இவர் நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு வீட்டின் வெளியே அக்கம் பக்கத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் சிவா, 27; முருகன் மகன் அஜீத், 25; பழனிவேல் மகன் வைரவேல், 30; ஆகியோர் தனலட்சுமியை திட்டினர்.

தொடர்ந்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பிரிட்ஜ், சிலிண்டர் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக கேட்ட தனலட்சுமியை கத்தியால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் சிவா, அஜீத், வைரவேல் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us