/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைதீர்வு கூட்டத்தில் 352 மனுக்கள்
/
குறைதீர்வு கூட்டத்தில் 352 மனுக்கள்
ADDED : செப் 16, 2025 06:43 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பட்டா மாற்றம், நிலம் அளவீடு, இலவச வீட்டு மனை கோருதல், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி கோருதல், சாலை வசதி ஏற்படுத்தி தருதல், தெரு மின்விளக்கு அமைத்தல், குடிநீர் வசதி, வங்கி கடனுதவி, ஆக்கிரமிப்பு அகற்றம், நீர்நிலை துார்வாருதல் உட்பட அனைத்து துறை சார்ந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து 346, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 6 என மொத்தமாக 352 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, தனித்துணை ஆட்சியர் சுமதி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.