/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புள்ளி தாள் விளையாடிய 4 பேர் கைது
/
புள்ளி தாள் விளையாடிய 4 பேர் கைது
ADDED : அக் 14, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே புள்ளித்தாள் விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருணாபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் கந்தன், 53; குளத்து மேட்டு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேஷ், 39; அரசம்பட்டு சுப்புராயன் மகன் ராஜா, 42; கா.மாமனந்தலை சேர்ந்த அன்பழகன் மகன் சரத்குமார், 31; ஆகிய 4 பேரும் கள்ளக்குறிச்சி அருகே புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 40 புள்ளித்தாள்கள் மற்றும் ரூ.1810 பணத்தை பறிமுதல் செய்தனர்.