/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிபோதையில் தகராறு 4 வாலிபர்கள் கைது
/
குடிபோதையில் தகராறு 4 வாலிபர்கள் கைது
ADDED : நவ 03, 2024 11:20 PM
கச்சிராயபாளையம்: அம்மாபேட்டை கிராமத்தில் தகராறில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் வெங்கடேசன், 20; இவர், கடந்த 31ம் தேதி இரவு 9:00 மணியளவில் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு மது போதையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அன்பு என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், அன்பு உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து ராஜவேலு மகன் கவிராஜ், 21; சின்னதுரை மகன் விஸ்வா, 21; கதிர்வேல் மகன் சின்னப்பன், 22; திருமலைராஜ் மகன் ஜெயக்குமார், 22; ஆகிய 4 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அன்புவை தேடி வருகின்றனர்.