sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்டத்தில் 40 சமூக நீதி விடுதிகள் அரசு அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு

/

மாவட்டத்தில் 40 சமூக நீதி விடுதிகள் அரசு அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு

மாவட்டத்தில் 40 சமூக நீதி விடுதிகள் அரசு அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு

மாவட்டத்தில் 40 சமூக நீதி விடுதிகள் அரசு அலுவலர்கள் குழு மூலம் ஆய்வு


ADDED : அக் 31, 2025 02:38 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் உள்ள 40 சமூக நீதி விடுதிகளை அரசு அலுவலகர்கள் குழு மூலம் இரு நாட்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவ மாணவிகளுக்கான 40 சமூக நீதி விடுதிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 40 விடுதிகளையும் நேற்றும் இன்றும்(31 ம் தேதி) ஆய்வு செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி விடுதிகளை ஆய்வு செய்யும் பொருட்டு 7 துணை கலெக்டர்கள் , 6 தாசில்தார்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சமூக நீதி விடுதிகளை நேற்று ஆய்வு செய்தனர். இதில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவின் தரம், மாணவர்களின் எண்ணிக்கை, குடிநீர், மின்சார வசதி, மாணவர்கள் தங்கியுள்ள விவரம் மற்றும் வருகை, வருகைப் பதிவேடு, பொருட்களின் இருப்பு, விடுதிகளின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின் போது ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆய்வின் விவரங்களை நல்லோசை இணையதளத்திலும் பதிவு செய்து அறிக்கை அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us