/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்கள் வடிவமைப்பில் 50 ஆண்டுகளாக சாதனை
/
தேர்கள் வடிவமைப்பில் 50 ஆண்டுகளாக சாதனை
ADDED : ஜன 15, 2025 12:18 AM

கள்ளக்குறிச்சி, ;அதிநவீன தேர் வடிவமைப்பில் 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறையில் தயாரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட தேர்கள் தமிழகம் முழுதும் இயக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய தேர்களை வடிவமைக்கும் பணிகளை ஸ்ரீ ஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறை, செய்து வருகிறது. கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறை இயங்கி வருகிறது.
இங்கு புதிய தேர் வடிவமைப்பு மற்றும் வடிவம் மாறாமல் பழங்கால தேர்களை புதிய தொழில் நுட்பத்துடன் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறது.
நான்கரை அடி அகலம், 21 அடி உயரம், பனிரெண்டரை அடி அகலம், 37 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட தேர்கள் கூட இலுப்பை மரங்களால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன், சுவாமி சிலைகள், ஆட்டோமேட்டிக் பிரேக், இரும்பு அச்சுகளைக் கொண்ட சக்கரங்கள் பொருத்தி 100 ஆண்டுகளுக்கு மேலாக உழைக்கக்கூடிய அதிநவீன தொழில் நுட்பத்துடன் தேர்கள் இங்கு செய்யப்படுகின்றன.
புதிய தேர் வாங்கினாலும், பழைய தேர்களை புதிப்பித்தாலும் மூன்று ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிப்பு பணிகள் செய்து தருகின்றனர். இப்பணிகளை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு தலைமுறைகளாக, தேர் வடிவமைப்பு வல்லுனர் பிரகாஷ்,45, தனது தந்தை காலத்திலிருந்து செய்து வருகிறார்.
இங்கு தயாரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட அதிநவீன தேர்கள் தமிழகம் முழுதும் இயக்கப்பட்டு வருகிறது. வாங்கும் தேரினை வாடிக்கையாளர்களின் சொந்த ஊருக்கு நேரடியாக எடுத்து சென்று கொடுப்பதுடன், தேரோடும் வீதிகளில் சோதனை ஓட்டம் செய்தும் காண்பிக்கின்றனர்.
புதிய தேர்களை அந்தந்த பகுதிகளுக்கே சென்று தயாரித்துக் கொடுப்பதுடன், பழைய தேர்தகளை சீரமைக்கவும் செய்கின்றனர். 99761 62384 என்ற மொபைல் எண்ணில் தேர் வடிவமைப்பாளர் பிரகாஷை தொடர்பு கொள்ளலாம்.