/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஞானானந்தகிரி சுவாமிகளின் 51வது ஆராதனை விழா
/
ஞானானந்தகிரி சுவாமிகளின் 51வது ஆராதனை விழா
ADDED : டிச 06, 2024 10:40 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள் 51ம் ஆண்டு ஆராதனை விழாவில் லட்சார்ச்சனை துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை ஸ்ரீ வித்யா கடஸ்தாபனம், நவாவரண பூஜை, அதிர்ஷ்டானத்தில் லட்சார்ச்சனை மற்றும் ரங்கன்ஜியின் உபன்யாசம் துவங்கியது.
வரும் 10ம் தேதி வரை தினமும் மாலை 3:00 மணியிலிருந்து 5:00 மணி வரையும், இரவு 7:00 மணியிலிருந்து, 9:00 மணி வரையும் உபன்யாசம் நடக்கிறது.
ஆராதனை தினமான வரும் 16ம் தேதி காலை 5:30 மணிக்கு பாத பூஜை, அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அலங்காரம், லட்சார்ச்சனை நிறைவு, மதியம் 1:00 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.