/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்பு கூட்டத்தில் 396 மனுக்கள் வழங்கல்
/
குறைகேட்பு கூட்டத்தில் 396 மனுக்கள் வழங்கல்
ADDED : அக் 07, 2025 12:40 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 396 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில், வருவாய் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர், சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 396 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங் கேற்றனர்.