sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆசிரியர் வீட்டில் 70 சவரன் மர்ம நபர்களால் கொள்ளை

/

ஆசிரியர் வீட்டில் 70 சவரன் மர்ம நபர்களால் கொள்ளை

ஆசிரியர் வீட்டில் 70 சவரன் மர்ம நபர்களால் கொள்ளை

ஆசிரியர் வீட்டில் 70 சவரன் மர்ம நபர்களால் கொள்ளை


ADDED : அக் 16, 2025 02:06 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 70 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் தாய் நகரை சேர்ந்தவர் நடனசபாபதி, 57, பீளமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி வடிவு, 55, கீழத்தேனுார் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்.

இந்த தம்பதியின் மகள் ஜனனி, சின்னசேலம் அருகே தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக உள்ளார். மூவரும் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி, வேலைக்கு சென்று விட்டனர்.

மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் மாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மாடி கதவு வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து தியாதுருகம் போலீசில் நடனசபாபதி புகார் அளித்தார். திருடு போன நகைகளின் மதிப்பு 70 லட்சம் ரூபாய். தியாகதுருகம் போலீசார், நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us