/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு
/
வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு
ADDED : ஜூலை 29, 2025 08:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.
சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி, 40; இவரது வீட்டிற்குள் நேற்று காலை 6 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் பாம்பை பார்த்து வெளியே ஓடி வந்தனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டிற்குள் இருந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.