/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
/
மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
ADDED : ஜன 09, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, - கச்சிராயபாளையம் அருகே மதுபாட்டில் விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா என்பவர் வீட்டிற்கு பின்புறமாக மதுபாட்டில் விற்றது தெரிந்தது. ராஜா மீது வழக்குப் பதிந்து, அவரிடமிருந்த 48 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

