/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்
/
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்
சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ.,யில் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்
ADDED : ஆக 10, 2025 11:40 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (11ம் தேதி)நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு;
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை பெற மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.)யில் இன்று 11ம் தேதி காலை 9:00 முதல் 4:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். என்.சி.வி.டி மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரண்டிஸ் ஆக சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரன்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாத உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, 04146---294989 மற்றும் மண்டல பயிற்சி இணை இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம், 04146 - 290673 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.