/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., நிவாரண பொருட்கள் வழங்கல்
/
அ.தி.மு.க., நிவாரண பொருட்கள் வழங்கல்
ADDED : டிச 06, 2024 06:32 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அண்ணா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில் 30க்கு மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., சார்பில் மளிகை பொருட்கள் மற்றும் அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். ஒன்றிய செயலாளர் அரசு இளந்தேவன், அவைத் தலைவர் அண்ணாமலை, பவுல்ராஜ், தமிழ்ச்செல்வன், திருமால் ,சேகர், அர்ஜூனன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.